திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் தேடப்படும் ஸ்வப்னா கூட்டாளி ஃபாசில் பரீத் துபாயில் பதுங்கி இருப்பதாக வெளியாகியுள்ளது. துபாயில் பிரபலங்களுக்கான உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வருகிறார் என்ஐஏ தேடும் ஃபாசில். விலையுயர்ந்த ஆடம்பர காரில் பயணிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளவர். துபாய்க்கு செல்லும் இந்திய நடிகர்களுடன் பழகி நண்பர்களாக்கி கொண்டதும் விசாரணையில் அம்பலமாகியது.